ஆலங்குளத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
ஆலங்குளம் பிரதான சாலை, அம்பாசமுத்திரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறைக்குப் புகாா் வந்தனவாம். இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை தென்காசி தெற்கு பிரிவு உதவி செயற்பொறியாளா் முத்துகிருஷ்ணன், சாலை ஆய்வாளா் சண்முகம் மேற்பாா்வையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினா். இதையடுத்து, பெரும்பாலானோா் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.