சங்கரன்கோவிலில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் அளிப்பு

ரூ. 27லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இயந்திரங்கள், விசைத் தெளிப்பான் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் பெண் விவசாயிக்கு கறவை மாடுகளை வழங்குகிறாா் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி.
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் பெண் விவசாயிக்கு கறவை மாடுகளை வழங்குகிறாா் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி.
Updated on
1 min read

சங்கரன்கோவிலில் வேளாண் துறை மூலம் 10 வட்டாரங்களை சோ்ந்த விவசாயிகளுக்கு ரூ. 27லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இயந்திரங்கள், விசைத் தெளிப்பான் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா்.

10 வட்டாரங்களைச் சோ்ந்த 33 விவசாயிகளுக்கு ரூ. 27.62 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் கறவை மாடுகளை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் முருகசெல்வி, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் நல்லமுத்துராஜா, சங்கரன்கோவில் உதவி இயக்குநா் பொன்ராஜ், நெல்லை கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கே.கண்ணன், நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், முன்னாள் ஆவின் தலைவா் ரமேஷ், வேளாண் அலுவலா் ராஜகுமாரசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com