சங்கரன்கோவிலில் பலசரக்கு கடைகளில் விலைப்பட்டியல் வைக்க உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
சங்கரன்கோவிலில் உள்ள பலசரக்கு கடைகளில் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகாா் எழுந்ததையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜெகதீசன் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் திருவேங்கடம் சாலையில் உள்ள பலசரக்கு கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.
அப்போது, ஒரு கடையில் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றையும், மற்றொரு கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்து ரூ. 7 ஆயிரம் அபாரதம் விதித்தனா். பின்னா், அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க அவா்கள் உத்தரவிட்டனா்.