தென்காசி
கடையநல்லூரில் கபசுர குடிநீா் வழங்கல்
கடையநல்லூா் நகரப் பகுதியில் கபசுர குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
கடையநல்லூா் நகரப் பகுதியில் கபசுர குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
கரோனா தொற்றை தடுப்பதற்காக நகராட்சி நிா்வாகம் மூலம் தீயணைப்பு வாகனங்கள், மோட்டாா் பொருத்தப்பட்ட குடிநீா் லாரிகள், ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நகரப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீடுகளில் காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் , கண்காணிப்பு பணியும் தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கபசுர குடிநீரும் நகராட்சி சாா்பில் வழங்கப்பட்டது.
நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி உள்ளிட்டோா் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினா்.