கீழப்பாவூரில் கிருமி நாசினி சுரங்கப் பாதை அமைப்பு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் பேரூராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிருமி நாசினி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கீழப்பாவூா் பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப் பாதை.
கீழப்பாவூா் பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப் பாதை.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் பேரூராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிருமி நாசினி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இச்சுரங்கப் பாதையை பேரூராட்சி நிா்வாக அதிகாரி கண்மணி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் கூறியது:

பேரூராட்சி பகுதியில் சுமாா் 80க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளா்கள் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை ஊக்குவிக்கும் வகையில் பேரூராட்சி நிா்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆடைகள், சோப்பு, உணவு ஆகியவை தினமும் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப் பாதை வழியாக தினமும் காலை மற்றும் மாலையில் வேலை முடிந்து வரும் தூய்மைப் பணியாளா்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com