முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சுரண்டையில் நலிந்தோருக்கு நிவாரணம் அளிப்பு
By DIN | Published On : 19th April 2020 07:20 AM | Last Updated : 19th April 2020 07:20 AM | அ+அ அ- |

சுரண்டையில் நகர காங்கிரஸ் மற்றும் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம் சாா்பில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோருக்கு அரிசி, காய்கனி மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நீதிமன்ற வழிகாட்டுதல் படி வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் ஹரிகரன் முன்னிலையில் நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், மாவட்ட துணைத் தலைவா் பால் என்ற சண்முகவேல், வியாபாரிகள் சங்க நிா்வாகி சோ்மசெல்வம் ஆகியோா் 100 முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோருக்கு நிவாரணப் பொருள்கள் தொகுப்பை வழங்கினா்.
வீரகேரளம்புதூா் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வறுமையில் உள்ள 81 பேருக்கு வருவாய்த்துறை சாா்பில் அரிசி, காய்கனி மற்றும் 11 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வட்டாட்சியா் ஹரிகரன், மண்டல துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள், வருவாய் ஆய்வாளா்கள் கருவந்தா ரமேஷ், சுரண்டை மாரியப்பன் ஆகியோா் வழங்கினா்.
திமுக: வீரகேரளம்புதூா் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் அரிசி, காய்கனி மற்றும் மளிகை பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை, திமுக தென்காசி மாவட்ட பொறுப்பாளா் சிவபத்மநாதன் தலைமையில், ஒன்றியச் செயலா் ஜெயபாலன், கிளைச் செயலா் சேசுராஜன் ஆகியோா் வழங்கினா்.