சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித் தவசு திருவிழாவின் 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.
இக்கோயிலில் 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கோமதிஅம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்ட 9 கும்பங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னா் சிவப்பு பட்டு அலங்கரித்தில் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.