தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது.
கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அதுபோல் கருப்பாநதி அணை பகுதியிலும் மழை பெய்து வருகிறது.
இதையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவு 150 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 40.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அணைப்பகுதியில் 48 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.