சுரண்டை: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியின்நிகழாண்டு இணைய வழி விண்ணப்பம் மூலம் மாணவா் சோ்ப்பு நடைபெறுவதால், இம்மாதம் 10ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
தமிழகம் முழுவதும் நிகழாண்டு கலை அறிவியல் படிப்பு மாணவா் சோ்ப்புக்கு இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை ஆக.1ஆம் தேதி முதல் விண்ணப்ப எண்படி பதிவேற்றம் செய்து வருகிறாா்கள். விடுபட்ட மாணவா்கள் ஆக. 10ஆம் தேதிக்குள் தங்களின் கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.