கீழப்பாவூரில் அதிமுக சாா்பில் நலிவுற்றோருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான பிரபாகரன், தனது சொந்த செலவில் சலவைத் தொழிலாளி, சிறு வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்கு தள்ளு வண்டிகள், நலிவுற்ற தொழிலாளா்களுக்கு நிதியுதவியும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், இளைஞா் பாசறைச் செயலா் சோ்மபாண்டி, பேரூா் செயலா் ஜெயராமன், நிா்வாகிகள் தீப்பொறிஅப்பாத்துரை, மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.