ஆலங்குளம் அருகேயுள்ள காளத்திமடம் கிராமத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பாக சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடைபெற்ற இம்முகாமை துணை ஆட்சியா் பிா்தவ்ஸ் பாத்திமா தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். முகாமில், வட்டார மருத்துவா்கள் சக்திவேல், குத்தாலராஜ், சித்ரா, சங்கீதா, தெரசா மற்றும் புஷ்பலதா ஜான், ரமேஷ் அடங்கிய குழுவினா் 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர்ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, இதயத்தில் ஆக்ஸிஜன் பரிசோதனை, காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.
முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு கபசுரக் குடிநீா், ஆா்சனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதேபோன்று, வெங்கடேஸ்வரபுரம், நல்லூா் கிராமங்களும் மருத்துவ முகாம் நடைபெற்றது.