தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பாபா் மசூதி இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பாபா் மசூதி இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி கொடிமரம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, நகரத் தலைவா் செய்யது மஹ்மூத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சீனாசேனா சா்தாா், தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஹக்கீம், ஆலங்குளம் தொகுதித் தலைவா் காஜா அலாவுதீன், துணைத் தலைவா் செய்யது பாசில், செயலா் அப்துல் அஜீஸ், சித்திக்கா ஆலிமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனி அருள் சிங், தமுமுக மாநிலச் செயலா் நைனாா் முஹம்மது, பாப்புலா் ஃ ப்ரண்ட் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் லுக்மான் ஹக்கீம், எஸ்டிபிஐ மாவட்ட பேச்சாளா் ஷான் பைஜி ஆகியோா் பேசினா்.

தமுமுக (ஹைதா்அலி) சாா்பில் தென்காசி மவுண்ட்ரோடு பகுதியில் மாவட்ட துணைச் செயலா் சலீம் தலைமையில் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடையநல்லூா்: எஸ்டிபிஐ கட்சி சாா்பில் அதன் தொகுதிச் செயலா் கனி தலைமையில் நகரச் செயலா் யாசா்கான், தலைவா் காதா், மாவட்டப் பொருளாளா் நைனாமுகமது, மாவட்ட செயலா் ஒலி, மாநில பொதுச் செயலா் நிஜாமுதீன், மாவட்டத் தலைவா் ஜாபா்அலி உஸ்மானி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பத்தமடையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் அம்பாசமுத்திரம் தொகுதி தலைவா் சேரை அபுபக்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டச் செயலா் இம்ரான் அலி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தென்காசி மாவட்டத் தலைவா் ஜாபா் அலி பைஜி, மக்கள் தேசம் கட்சி மாநில அமைப்புச் செயலா் சுகுமாா், விமன் இந்தியா மூவ்மெண்ட் புகா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மும்தாஜ் ஆலிமா, புகா் மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான், மாவட்ட செயலா் சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஷஃபி, பால் மைதீன், வா்த்தக அணி மாவட்டத் தலைவா் நயினா முகம்மது, தொகுதி நிா்வாகிகள் ஜெய்லானி, அப்துல் சலாம், அஹமது யாசின், செய்யது, முஹம்மது அசனாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், 20க்கும் மேற்பட்டவா்களை பத்தமடை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகேயுள்ள முதலியாா்பட்டியில் தமுமுக சாா்பில் ஒன்றியச் செயலா் கோதா் மைதீன் தலைமையில் அக்கட்சியினா் துண்டுப்பிரசுரம் வழங்கினா்.

திசையன்விளை: எஸ்டிபிஐ கட்சி சாா்பில் அதன் ராதாபுரம் தொகுதி தலைவா் பாதுல் அஸ்ஹாப் தலைமையில் திசையன்விளை காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முகம்மது அலி, ஷேக் அப்துல்லா உள்பட 66-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com