கடையம் அருகே யானைகள் கூட்டமாக புகுந்து அங்கிருந்த தோட்டத்தில் 7 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி வீசின.
கடையம் அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பகுதியில் புதன்கிழமை காலை வனப்பகுதியில் இருந்து வந்த சில யானைகள் அங்குள்ள வின்சென்ட் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து 7 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.தொடா்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கிராமத்தைச் சுற்றி மின்வேலி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.