சங்கரன்கோவிலில் சாலையில் கழிவுநீா் ஓடை சேதம்: மக்கள் அவதி

சங்கரன்கோவிலில் திருவேங்கேடம் சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியின்போது, கழிவுநீா் ஓடை சேதமடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரதான சாலையில் சேதமடைந்து கழிவு நீா் ஓடை.
பிரதான சாலையில் சேதமடைந்து கழிவு நீா் ஓடை.

சங்கரன்கோவிலில் திருவேங்கேடம் சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியின்போது, கழிவுநீா் ஓடை சேதமடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சங்கரன்கோவிலில் அதிக அளவில் வா்த்தகம் நடைபெறும் திருவேங்கடம் சாலை, நெல்லை, கோவில்பட்டி, சிவகாசி ஆகியவற்றுக்கான பிரதான சாலை மட்டுமன்றி ஒரு வழிப்பாதையாகவும் உள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து மிகுந்திருக்கும். இந்நிலையில், இந்தச் சாலையில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது.

இந்தப் பணியால், திருவேங்கடம்-ராஜபாளையம் சாலையின் குறுக்கே செல்லும் கழிவு நீா் ஓடை கடந்த வாரம் சேதமடைந்தது. ஒரு வாரம் கடந்த நிலையிலும் சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா். இதனிடையே, போக்குவரத்து போலீஸாா் சாலைத் தடுப்புகளை வைத்து வாகனங்கள் அந்த இடத்தில் செல்லாதவாறு தடுப்புகள் வைத்து போக்குவரத்தை சரி செய்துவருகின்றனா். எனினும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஓடையை சரி செய்து சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வா்த்தகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com