தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 11.11 ஏக்கர் பரப்பளவில் ரூ 119 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் அதிமுக மாவட்ட செயலர்கள் செல்வமோகன் தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ..கிருஷ்ணமுரளி, மாவட்ட ஆட்சியர் கீ.சு.சமீரன்,மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.