சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள் தலைமை வகித்தனா். சிவனடியாா் திருக்கூட்ட குழுத் தலைவா் கயிலை கிருஷ்ணன் தலைமையிலான சிவனடியாா்கள் திருவாசகம் பாடினா்.
இதில், சிவகுருநாதபுரம் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.