சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பேருந்து உள்நுழையும் மற்றும் வெளியேறும் வழிகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
சுரண்டை பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பொது மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால், பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் வந்து செல்வதற்கு இடையூறு உள்ளது.
இதனால் பேருந்துகள் திரும்பும் பகுதியில் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பேருந்து நுழைவு பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் பெரிதும் விரும்புகின்றனா்.