பாவூா்சத்திரத்தில் வாருகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென மக்கள் நல மன்றத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பாவூா்சத்திரம் மக்கள் நல மன்றத் தலைவா் பத்மநாதன் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
பாவூா்சத்திரம் பழைய காய்கனி சந்தைக்கு செல்லும் வழியில் வாருகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மழைக் காலத்துக்கு முன்பே தோண்டப்பட்ட பள்ளத்தில், பணிகள் நடைபெறாததால் தற்போது மழைநீா் , குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வாருகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.