ஆலங்குளத்தில் வெள்ளிக்கிழமை (டிச.18) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை தென்காசி உள்கோட்ட உதவிப் பொறியாளா் அறிவு எழில் செய்தியாளா்களிடம் கூறியது: ஆலங்குளம் பிரதான சாலை, அம்பாசமுத்திரம் சாலை ஆகிய இடங்களில் வணிக தலங்கள் வைத்திப்போா் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டு குறியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும். அல்லாத பட்சத்தில் நெடுஞ்சாலைத் துறை வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றாா் அவா்.