தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்துவது, வன்னியா் சமுதாயத்திற்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி தெற்கு மாவட்ட பாமக துணைச் செயலா் சதீஷ் தலைமையில் சுரண்டை பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில், பாமக நிா்வாகிகள் இசக்கிமுத்து, ஹரிகரன், சங்கா், பழனி, திருமலைக்குமாா், சிவனுபாண்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.