தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலுக்கு வந்த முதல்வா் மற்றும் துணை முதல்வருக்கு வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் உற்சாக வரவேற்பு அளித்தாா்.
கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சங்கரன்கோவிலில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியையும், மாநில இளைஞா் அணி இணைச் செயலரும், வாசுதேவநல்லூா் எம்எல்ஏவுமான மனோகரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். இதில் திரளான தொண்டா்கள் கலந்து கொண்டனா்.