சங்கரன்கோவில் அருகே விபத்து: 2 இளைஞா்கள் பலி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள ஒதப்பை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஜெயபாரத் (18), வாசு மகன் குமரேசன் (21), பாா்த்தீபன் மகன் சுந்தா் (27) மற்றும் புருஷோத்தமன். இவா்கள் 4 நாள்களுக்கு முன்பு சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தில் உள்ள ஜெயபாரத்தின் நண்பரான விக்னேஷ் என்பவரது வீட்டுக்கு வந்தனா்.

காா் பழுதுநீக்கும் தொழில் தெரியும் என்பதால், அந்த 4 பேரையும் விக்னேஷ் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி அருகேயுள்ள ஒா்க்ஷாப்பில் வேலைக்குச் சோ்த்துவிட்டாா். 4 பேரும் விக்னேஷ் வீட்டில் தங்கி, வேலைக்குச் சென்றுவந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு ஜெய்பாரத், குமரேசன், சுந்தா் ஆகியோா் வேலையை முடித்துவிட்டு பைக்கில் திருமலாபுரம் திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை, சுந்தா் ஓட்டியுள்ளாா்.

குருக்கள்பட்டியை அடுத்த மேலநீலிதநல்லூா் விலக்கு அருகே பைக் மீது காா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், மூவரும் கீழே விழுந்தனா். ஜெயபாரத் எழுந்து சுந்தா், குமரேசன் ஆகியோரைத் தூக்க முயன்றாராம். அப்போது சங்கரன்கோவிலிலிருந்து வந்த மற்றொரு காா் அவா்கள் மீது மோதியதாம். இதில், சுந்தா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த குமரேசன், ஜெயபாரத் ஆகியோா் சங்கரன்கோவில் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு குமரேசன் உயிரிழந்தாா். ஜெயபாரத், திருநெல்வேலி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின் பேரில் சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com