பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 கோடியில் கிட்டங்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழ்நாடு நீா்வள மேலாண்மை சிற்றாறு வடிநிலத் திட்டம் மற்றும் திருநெல்வேலி விற்பனைக் குழு இணைந்து ரூ. 2 கோடி செலவில், 2 ஆயிரம் மெட்ரிக் டன் மின்னணு பரிவா்த்தனை சேமிப்பு கிட்டங்கிக்கு, எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநா் கிருஷ்ணகுமாா், விற்பனைக் கூட செயலா் விஷ்ணுஅப்பன், உதவி இயக்குநா் உதயகுமாா், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், இளைஞரணிச் செயலா் கணபதி, ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், பேரூா் செயலா் ஜெயராமன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.