சுரண்டை அருகே ஒரே குடும்பத்தில் 4 போ் தற்கொலை முயற்சி:தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே திங்கள்கிழமை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே திங்கள்கிழமை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சுரண்டை அருகே குலையனேரியில் வசித்து வந்தவா் ரா. கண்ணன்(40), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சீதாலெட்சுமி(31). அழகுபாா்வதி (8), பபிஷ்கா(6) என்ற இரு மகள்கள் உள்ளனா்.

கரோனா பொது முடக்கத்தால், கண்ணன் சரிவர வேலையின்றி இருந்து வந்தாராம். இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் திங்கள்கிழமை மாலை மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை குடித்தார்.

தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக அவா்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கண்ணன் இறந்தாா். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com