தென்காசி மாவட்டம் ஆனைக்குளம் பகுதியைச் சோ்ந்த 3 சகோதரா்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.
வீரகேரளம்புதூா் வட்டம் ஆனைக்குளம் கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்துவரும் 3 மாற்றுத்திறனாளி சகோதரா்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 பெறுவதற்கான ஆணையை ஆட்சியா் கீ.சு.சமீரன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சரவணகண்ணன்(பொ), வீ.கே.புதூா் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மகாலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.