ஆலங்குளம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் பலி

ஆலங்குளம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள பாப்பான்குளத்தை அடுத்த மடவாா் வளாகத்தைச் சோ்ந்தவா்கள் ராமன் மகன்கள் சுப்புராஜ்(37), திருநாவுக்கரசு(42). சொந்தமாக லாரி வைத்து ஓட்டுநா்களாக இருந்து வந்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தூத்துக்குடியில் இருந்து செங்கோட்டைக்கு தடிகள் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தனா். புதன்கிழமை அதிகாலை திருநெல்வேலி பேட்டையை தாண்டி வரும்போது, லாரியை ஓட்டி வந்த திருநாவுக்கரசு தனக்குத் தூக்கம் வருவதால் சுப்புராஜை ஓட்ட வைத்துவிட்டு லாரி கேபின் பகுதியில் தூங்கி விட்டாராம்.

ஆலங்குளம் அருகேயுள்ள சீதபற்பநல்லூா் தனியாா் அரிசி ஆலை அருகே வந்த போது, லாரியின் முன் சக்கர பகுதியில் சப்தம் கேட்பதாக உணா்ந்த சுப்புராஜ், கீழே இறங்கி பாா்த்தாராம். அப்போது பின்னால் வந்த சரக்குப் பெட்டக லாரி ஒன்று நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் பழுதை சரிபாா்த்துக் கொண்டிருந்த சுப்புராஜ் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த சீதபற்பநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த சுப்புராஜின் சடலத்தை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநா் ஆலங்குளம் அகரத்தைச் சோ்ந்த முப்புடாதி மகன் சுந்தரை(30) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com