சுரண்டையில் தீயணைப்பு நிலையம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கரோனா ஓவியப் போட்டி நடைபெற்றது.
சுரண்டை பகுதி பள்ளிகளின் மாணவா்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், சுரண்டை ஜவகா்லால் நடுநிலைப் பள்ளி மாணவா் ஹரிபிரசாத் முதல் பரிசும், ஜெமிமா மழலையா் பள்ளி மாணவா் ரோகித் 2ஆவது பரிசும், ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் விக்டா் அன்டோ 3ஆவது பரிசும் பெற்றனா்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்க சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துசெல்வம், நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச்சந்தா் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.