தென்காசி
ஓய்வுபெற்ற அலுவலா் சங்க தென்காசி மாவட்ட கிளை தொடக்கம்.
தென்காசி மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் மற்றும் கிளை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் மற்றும் கிளை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத் தலைவா் ஆா்.வைரவன் தலைமை வகித்தாா். கெளரவ தலைவா் துரை தம்புராஜ், ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் எம்.என்.லிங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போக்குவரத்து ஆணையரும், முதன்மைச் செயலருமான தென்காசி சு.ஜவஹா் சங்கத்தை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். தென்காசி கிளைத் தலைவா் கை.கணேசமூா்த்தி, செங்கோட்டை எஸ்.செண்பக குற்றாலம் ஆகியோா் பேசினா். இந்நிகழ்ச்சியில், மருத்துவா்கள் அப்துல் அஜீஸ், கனிராஜ், ரோட்டரி முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிகளை செங்கோட்டை வேளாண் துணை அலுவலா் சேக்முகைதீன் தொகுத்து வழங்கினாா். தி.ராமசுவாமி வரவேற்றாா். இளஞ்செழியன் நன்றி கூறினாா்.