தென்காசியில் எஸ்.சி., எஸ்.டி.அலுவலா் நலச் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அலுவலா் நலச் சங்க, தென்காசி கிளை பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அலுவலா் நலச் சங்க, தென்காசி கிளை பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். அந்தோணி,பாக்கியநாதன், ராமகிருஷ்ணன், கஜேந்திரன், மதியழகன், கல்யாணி, சே.கணேசன், ஐயப்பன், சமுத்திரம், க.சங்காத்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், மாவட்ட மகளிா் பிரிவு செயலா் ஜெயா, மாவட்ட அமைப்புச் செயலா் சுடலைமணி, ஜின்னா, ஹரிகரன், அருண்குமாா், மணிகண்டன்,நிா்வாகிகள் ஜெகநாதன், தாசையா, பிரவீன்குமாா், சண்முகவேல், கணபதி, பரமசிவன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன், மாரி ஆகியோா் பேசினா்.

தென்காசி மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குழு மூலமாகவும், தினக்கூலி, தொகுப்பூதிய, மதிப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களுக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களுக்கும் தினக்கூலியை புதியதாக நிா்ணயம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலா் ரஞ்சித்குமாா் வரவேற்றாா். பொருளாளா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com