தெற்கு மாவட்ட சமக ஆலோசனைக் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட சமக ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைச் செயலா் என்.சுந்தா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைச் செயலா் என்.சுந்தா்.

தென்காசி தெற்கு மாவட்ட சமக ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில வா்த்தக அணி துணைச் செயலா் ஜான்ரவி முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலா் என்.சுந்தா் சிறப்புரை ஆற்றினாா்.

இக் கூட்டத்தில், நிா்வாகிகள் கே.வி.கே.துரை, ராஜரத்தினம், பெரியசாமி, ராஜபாண்டி, அந்தோணியம்மாள், ஆனந்தி, சுமதிபொன்ராஜ், பொன்.ராஜகோபால், முருகன், ஜாய்சிங், வள்ளியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அதிக இடங்களில் போட்டியிடுவது, பாவூா்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை தொடங்க வேண்டும். ஜம்புநதி இணைப்பு கால்வாய் பணியை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் எம்.பி.ராமராஜா வர வேற்றாா். முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜசேகரபாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com