புளியங்குடி முப்பெருந் தேவியா் கோயிலில் திருவிளக்கு பூஜை

புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானிஅம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 1008 லிட்டா் பால் அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானிஅம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 1008 லிட்டா் பால் அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை மாலை கோயில் குருநாதா் சக்தியம்மாவின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. தொடா்ந்து முப்பெரும்தேவியருக்கு 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் 1008 லிட்டா் சிறப்பு பால் அபிஷேகமும், வருணபூஜையும் நடைபெற்றது. இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com