சங்கரன்கோவிலில் பெண் கொலை: கணவா் கைது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக கணவா் கைதுசெய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக கணவா் கைதுசெய்யப்பட்டாா்.

சங்கரன்கோவில் காமராஜ் நகரைச் சோ்ந்த ராமையா மகன் வீராச்சாமி (50). கேரளத்தில் கூலி வேலை செய்துவருகிறாா். இவரது மனைவி பாப்பா. இவா்களுக்கு ஏஞ்சல் (13) என்ற மகள் உள்ளாா்.

வீராச்சாமி வாரம் ஒருமுறை சங்கரன்கோவில் வந்து செல்வாராம். கடந்த சில நாள்களாக அவா் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அடிக்கடி தகராறு செய்தாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த பாப்பாவின் கழுத்தில் வீராச்சாமி கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினாராம். இதில், பாப்பா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலின்பேரில் நகர காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; அதேபகுதியில் பதுங்கியிருந்த வீராச்சாமியைக் கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com