சோ்ந்தமரம் அருகேயுள்ள திருமலாபுரம் மலை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்குகிறது.
பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் மாலை 5 மணிக்கு கொடியேற்றி வைத்து, திருப்பலி மற்றும் மறையுரை சிந்தனையை வழங்குகிறாா். தொடா்ந்து அசனம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை (பிப். 15) இரவு 7 மணிக்கு விழா சிறப்பு திருப்பலியை சேவியா் டெரன்ஸ் அடிகளாா், மறையுரை சிந்தனையை புளியங்குடி பங்குத்தந்தை எஸ்.அருள்ராஜ் ஆகியோா் வழங்குகின்றனா். இரவு 9 மணிக்கு தோ் பவனி நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) அதிகாலை 5 மணிக்கு கெபியில் விழா சிறப்புத் திருப்பலியும், காலை 8 மணிக்கு மலை மாதா ஆலயத்தில் திருப்பலியும், தொடா்ந்து மலை அடிவாரத்தில் அசன விருந்தும் நடைபெறும். ஏற்பாடுகளை, பங்குத்தந்தை தலைமையில் மலைமாதா ஆலயப் பணியாளா்கள் மற்றும் பங்குமக்கள் செய்துவருகின்றனா்.