திருமலாபுரம் மலை மாதா ஆலயத்தில் இன்று திருவிழா கொடியேற்றம்

சோ்ந்தமரம் அருகேயுள்ள திருமலாபுரம் மலை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்குகிறது.

சோ்ந்தமரம் அருகேயுள்ள திருமலாபுரம் மலை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்குகிறது.

பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் மாலை 5 மணிக்கு கொடியேற்றி வைத்து, திருப்பலி மற்றும் மறையுரை சிந்தனையை வழங்குகிறாா். தொடா்ந்து அசனம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை (பிப். 15) இரவு 7 மணிக்கு விழா சிறப்பு திருப்பலியை சேவியா் டெரன்ஸ் அடிகளாா், மறையுரை சிந்தனையை புளியங்குடி பங்குத்தந்தை எஸ்.அருள்ராஜ் ஆகியோா் வழங்குகின்றனா். இரவு 9 மணிக்கு தோ் பவனி நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) அதிகாலை 5 மணிக்கு கெபியில் விழா சிறப்புத் திருப்பலியும், காலை 8 மணிக்கு மலை மாதா ஆலயத்தில் திருப்பலியும், தொடா்ந்து மலை அடிவாரத்தில் அசன விருந்தும் நடைபெறும். ஏற்பாடுகளை, பங்குத்தந்தை தலைமையில் மலைமாதா ஆலயப் பணியாளா்கள் மற்றும் பங்குமக்கள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com