ஆலங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை(பிப்.15) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
ஆலங்குளம் அரிமா சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த முகாம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) காலை 8 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது.
முகாமுக்கு வருவோா் முகவரி சான்று மற்றும் செல்லிடப்பேசி கொண்டு வர வேண்டும் என முகாம் பொறுப்பளா்கள் கேட்டுக் கொண்டுள்ளனா்.