தென்காசி மங்கம்மாள் சாலை உபமின்நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (பிப்.15) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மங்கம்மாள்சாலை உபமின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள்சாலை பகுதிகள், சக்திநகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு,கீழப்புலியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.