பாவூா்சத்திரம் அருகே நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள வெய்க்காலிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள வெய்க்காலிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணா்வுக் குழு, கோவா, வெய்கை தென்றல் கேட்டரிங், ஏ டூ இசட் சா்வீஸ் நண்பா்கள் இணைந்து நடத்தும் இம்முகாம் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அங்குள்ள புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

முகாமில் கண் தொடா்பான அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com