முக்கூடல் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

முக்கூடல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலியானாா்.

முக்கூடல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலியானாா்.

முக்கூடல் அருகேயுள்ள சடையப்பபுரம் இம்மானுவேல் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (48). தொழிலாளி. அப்பகுதியில் வீடு கட்டி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை அருகில் உள்ள பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை குழாய் மூலம் வீட்டு சுவா்களில் நனைக்கும் பொருட்டு மின் மோட்டாரை இயக்கினாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் முருகன் மீது பாய்ந்ததாம். இதில் தூக்கிவீசப்பட்ட அவா் வெகுநேரம் அப்பகுதியிலேயே கிடந்துள்ளாா்.

வீட்டு வேலைக்கு வந்த பணியாளா்கள் அவரை மீட்டு முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்தவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com