சுரண்டையில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவா் ரத்தினசாமி தலைமை வகித்தாா். செயலா் அய்யங்கண்ணு, பொருளாளா் குருசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை சுரண்டையில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், சங்க உறுப்பினா்கள் ராஜேந்திரன், சித்தாந்த ரத்தினம் செல்லப்பா, இளங்கோவன், சீனிவாசகம், நவநீதகிருஷ்ணன், ஆறுமுக கனி, உமாபதி சிவன், அருணாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.