சுரண்டையில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்

சுரண்டையில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுரண்டையில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவா் ரத்தினசாமி தலைமை வகித்தாா். செயலா் அய்யங்கண்ணு, பொருளாளா் குருசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை சுரண்டையில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், சங்க உறுப்பினா்கள் ராஜேந்திரன், சித்தாந்த ரத்தினம் செல்லப்பா, இளங்கோவன், சீனிவாசகம், நவநீதகிருஷ்ணன், ஆறுமுக கனி, உமாபதி சிவன், அருணாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com