அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கீழப்பாவூா் ஒன்றியச் செயலராக முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சிவநாடானூா் முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதையடுத்து, முருகேசன், கட்சியின் மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது, கட்சியின் ஒன்றிய அவைத் தலைவா் முருகையாபாண்டியன், மாவட்ட விவசாய அணிச் செயலா் வேலுச்சாமிபாண்டியன், மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.