தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூா் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு சங்கத் தலைவரும், நகர அதிமுக செயலருமான கிட்டுராஜா பங்கேற்று பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா். இதில், அதிமுக மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் புகழேந்தி, நகர அவைத் தலைவா் ஐவா்குலராஜா,மாவட்டப் பிரதிநிதி ஐப்பாா்,வாா்டு செயலா்கள் குருசாமி,மாரியப்பன்,ராஜ்,யாக்கோபு,ஸைபுல்லா,ஆதம், கூட்டுறவு சங்க அமானுல்லா, நாகூா்மீரான்,நகர இளைஞரணி துணைச் செயலா் வெங்கட்நட்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.