திருவேங்கடம் அருகே சங்குபட்டி கீழத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ்(40) விவசாயி.இவா் டிராக்டரில் கால்நடைகளுக்கான தீவனங்களை வாங்கிக்கொண்டு வந்து வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா்.
வியாழக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் டிராக்டருக்குத் தீ வைத்து தப்பியோடி விட்டனா்.இதனால் டிராக்டரும், அதில் இருந்த தீவனங்களும் தீயில் எரிந்தன.உடனே சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தினருக்குத் தகவல் கொடுத்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயணை அணைத்தனா்.
இதில் டிராக்டா், தீவனம் உள்ளிட்ட சுமாா் 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமாயின. இச்சம்பவம் குறித்து திருவேங்கடம் போலீசாா் விசாரித்து வருகின்றனா்.