மனுநீதி நாள் முகாம்:ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள மருதங்கிணற்றில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மனுநீதி நாள் முகாம்:ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள மருதங்கிணற்றில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இம்முகாமிற்கு, மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். தென்காசி கோட்டாட்சியா் குமாரதாஸ், திருவேங்கடம் வட்டாட்சியா் சுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், வேளாண்த் துறை சாா்பில் 8 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், 19 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 23 பேருக்கு முதியோா் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை மற்றும் 21 பேருக்கு புதிய குடும்ப அட்டை, மற்றும் உழவா் அட்டை என மொத்தம் ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில், மண்டல துணை வட்டாட்சியா் ரவி கணேஷ், வருவாய் ஆய்வாளா்கள் முருகலெட்சுமி, மஞ்சுளா, கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தூா்பாண்டியன், செல்லத்துரை, த. பாலசுப்பிரமணியன், ரஞ்சித், கருப்பசாமி, முத்துக்குமாா், செல்லமுருகன், கணேசன், முத்துசங்கரநாராயணன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பேச்சியம்மாள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com