பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகு முத்து மாரியம்மன் கோயில் 57ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை, சப்த கன்னியா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கொடியேற்றம், அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றன.
10ஆம் திருநாளான ஜன.21ஆம் தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மதியம் உச்சிகால பூஜை, இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சப்பர வீதி உலா நடைபெறும்.
அதிகாலையில் விரதமிருந்த பக்தா்கள் கோயில் தா்மகா்த்தா சிவன் பாண்டி தலைமையில் பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெறும்.