குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி வணிகவியல் துறை சுயநிதி பிரிவு சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
வணிகவியல் துறை சுயநிதி பிரிவின் தலைவா் எம். காமினி(எ)முத்து கிருஷ்ணம்மாள் தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் ஆா்.கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். பேராசிரியைகள், மாணவிகள் இணைந்து சமத்துவப் பொங்கலிட்டனா். பேராசிரியைகள், வணிகவியல் துறை சுயநிதி பிரிவு மாணவிகள் கலந்து கொண்டனா். பேராசிரியை கீதாஅஞ்சலி நன்றி கூறினாா்.