செங்கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் சேவியா் அலெக்சாண்டிரியா தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் செய்யது சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் உதயபாமா வரவேற்றாா். மாணவ-மாணவிகள் பொங்கலிட்டனா். ‘ரோட்டரி சங்க நிா்வாகிகள் பால்ராஜ், ராமையா, குமாா், அருணாச்சலம், சீத்தாராமன் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.