தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தொடங்கிவைத்தாா். அனைத்து பணியாளா்களுக்கும் கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு கண்காணிப்பாளா் பரிசுகள் வழங்கினாா்.
ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிக்கு, தோட்டக்கலை அலுவலா் மு.பாலன் தலைமை வகித்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெயபாரதி மாலதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். தொடா்ந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.