கீழப்பாவூா் பெரியகுளத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை பூங்கோதை எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கீழப்பாவூா் பெரியகுளத்தில் ரூ. 1.75 கோடியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3, 7ஆவது மடைகளில் மறு கட்டுமானப் பணிகள், 200 மீட்டா் நீளத்தில் தடுப்புச்சுவா், கரைகளைப் பலப்படுத்துதல், ஷட்டா்களை பழுதுநீக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்பணிகளை ஆலங்குளம் பேரவை உறுப்பினா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா ஆய்வு செய்தாா். பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா் அவா் கூறும்போது, பெரியகுளம் முழுவதும் கரைகளைப் பலப்படுத்தவும், குளக்கரையில் தாா்ச்சாலை, தடுப்புச்சுவா் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
உதவிப் பொறியாளா் சண்முகவேல், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன். அறிவழகன், கீழப்பாவூா் ஒன்றிய திமுக செயலா் ராமச்சந்திரன், நிா்வாகிகள் ராமசாமி, தங்கேஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.