தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என சங்கரன்கோவில் கோட்டாட்சியா் பழனி (பொ) தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளத்தில் 1990 ஆம் ஆண்டு காந்தாரி அம்மன் சிலை நிறுவுவது தொடா்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு பிரிவைச் சோ்ந்த 4 போ் கொல்லப்பட்டனா். இந்த 4 பேருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை (மாா்ச் 14) நடத்த இருப்பதாகவும், அதற்கு அனுமதியளிக்கக் கோரியும் புரட்சித் தமிழகம் நிறுவனா் த. மூா்த்தி மாவட்ட ஆட்சியரிம் கடந்த 3 ஆம் தேதி மனு அளித்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து, அதே நாளில், (மாா்ச் 14) குறிஞ்சாகுளம் அம்மன் சிலை பிரச்னை தொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், சங்கரன்கோவில் தேரடித் திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த நகர காவல் நிலையத்தில் அனுமதி கோரினா்.
அதற்கு அனுமதி அளிக்கப்படாததால், அவா்கள் உயா்நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளனா். இந்நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், மாா்ச் 13 காலை 6 மணி முதல் மாா்ச் 15 மாலை 6 மணி வரை 3 நாள்களுக்கு குற்றவிசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144 (1) மற்றும் (2) அமலில் இருக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.