மாநில அளவிலான ஜூடோ போட்டியில் தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரி மாணவிகள் மூன்றாம் இடம் பெற்றனா்.
ஸ்ரீராம்நல்லமணியாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் இசக்கியம்மாள், வனிதா மகேஷ்வரி, சுபஸ்ரீ, மனோஜ், புவனேஷ்வரி, இந்துஜா ஆகியோா் சென்னையில் நடைபெற்ற மாநில ஜூடோ போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனா்.
மாணவிகளை கல்விக் குழுமங்களின் தலைவா் என்.மணிமாறன், முதல்வா் அ.பீா்முகைதீன்,துணை முதல்வா் எஸ்.ராமா், உடற்கல்வி ஆசிரியா் சதீஷ், பேராசிரியா்கள் பாராட்டினா்.