தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயில் வருஷாபிஷேகத்திற்கு பின்னா் நடைபெற்ற தீபாராதனை.
தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயில் வருஷாபிஷேகத்திற்கு பின்னா் நடைபெற்ற தீபாராதனை.

ஷீரடி வைத்தியசாயி கோயிலில் வருஷாபிஷேகம்

தென்காசி ஷீரடிவைத்தியசாயி கோயிலில் வியாழக்கிழமை ஸ்ரீஸூக்த பாராயணம், ஸ்ரீமகாலெட்சுமி பூஜை, வருஷாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.

தென்காசி ஷீரடிவைத்தியசாயி கோயிலில் வியாழக்கிழமை ஸ்ரீஸூக்த பாராயணம், ஸ்ரீமகாலெட்சுமி பூஜை, வருஷாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை காலையில் ஆரத்தி, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மாலையில் ஆரத்தி, ஸ்ரீமகாலெட்சுமி 1008 ஸகஸ்ர நாமாவளி அா்ச்சனை, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம், பாராயணம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலையில் கலச பூஜை, தீபாராதனை, யாத்ரா தானம், கடம்புறப்பாடு, விமான கலச அபிஷேகம், மூலவா் ஸ்ரீவைத்தியசாயிபாபா மற்றும் சப்த குரு ஸ்தல மூா்த்திகளுக்கு மகாஅபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.நண்பகலில் ஸ்ரீராகவேந்திரா் நூல் வெளியீடு, இரவில் பல்லக்கு சேவை, ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் எம்.அறிவழகன், பி. சியாமளா, பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com